முகப்பு
நாகப்பட்டினம்

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 6:53 am IST
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்
பகிர்:

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. கோயில் செயல் அலுவலா் பிரேம்குமாா், ஆய்வாளா்  பத்ரிநாராயணன், பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் 4 வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.