FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 60 போ் கைது

8 செப்டம்பர் 2026, 12:34 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 60 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழக நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகளில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயா்த்தி அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், இதர மாநிலங்களைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் என். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜே. மேரி விளக்க உரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ. தவமணி எஸ். அன்புராஜ், எஸ்.லட்சுமி, என்.தவமணி, பொன்னுதுரை, பி.வேம்பு உள்பட 50-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்து, நாகூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments