ஆற்றில் மூழ்கி செங்கல்சூளை தொழிலாளி சாவு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றைக் கடந்தபோது, செங்கல்சூளை தொழிலாளி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றைக் கடந்தபோது, செங்கல்சூளை தொழிலாளி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு காலனி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் செங்கல்சூளையில் கல் அடுக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில், சக தொழிலாளர்களுடன் மன்னார்குடியை அடுத்த புத்தகரம் கிராமத்துக்கு சென்றபோது, கோரையாற்றைக் கடக்க நேர்ந்தது.
அப்போது, சக தொழிலாளர்கள் ஆற்றைக் கடந்த நிலையில், ஆறுமுகம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். எடையூர் போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.