இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தது.
மன்னார்குடி மதுக்கூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் அய்யாவு. இவர் தனது மனைவி முத்தழகி, மகன் விஜய் (3) ஆகியோரை அழைத்துக்கொண்டு, கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் மன்னார்குடி- தஞ்சை பிரதான சாலையில் செருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், வேகத் தடையை கடந்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில், முத்தழகியின் மடியில் அமர்ந்திருந்த விஜய், கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு விஜய் உயிரிழந்தான்.
இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.