காலமானார் சி. செல்வதுரை
திருவாரூர் அருகேயுள்ள விளமலில் வசித்து வந்த ஆசிரியர் சி. செல்வதுரை (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
திருவாரூர் அருகேயுள்ள விளமலில் வசித்து வந்த ஆசிரியர் சி. செல்வதுரை (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
இவர், திமுக நகர அலுவலகமான முத்துவேலர் -அஞ்சுகம் நினைவகத்தில் உள்ள கலைஞர் நூலக அறக்கட்டளை செயலர், திமுக மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர், திருவாரூர் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தவர். அவரது இறுதிச்சடங்கு பவித்திரமாணிக்கத்திலுள்ள புனித வனத்து அந்தோனியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.