FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

நீடாமங்கமலத்தில் வியாழக்கிழமை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நீடாமங்கமலத்தில் வியாழக்கிழமை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு வந்த அவர் காவல் சரகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், இரவு ரோந்துப் பணிகள்  உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். நீடாமங்கலத்தில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்து கேட்டறிந்த அவர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். நிலைய காவலர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டறிந்தார். ஆய்வின்போது, மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், நீடாமங்கலம்  காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர் பாலமுத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments