தூத்துக்குடி சம்பவம்: முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வர்த்தகர் கழகம் சார்பில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து வர்த்தகர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வர்த்தகர் கழகம் சார்பில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை வர்த்தகர் கழகம் சார்பில், பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தகர் கழகத் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமை வகித்தார்.
திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் முன்னிலை வகித்தார். வர்த்தகர் கழக பொதுச் செயலர் ராஜாராமன், ஒன்றிய திமுக செயலர் இரா. மனோகரன், நகரச் செயலர் எம்.எஸ். கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் சந்திரசேகர ஆசாத், தேமுதிக மாவட்ட துணைச் செயலர்ஆர்.டி. சிவராமன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலர் தாஜீதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, தமுமுக நகரச் செயலர் சம்சுதீன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகி சே. அருண் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வர்த்தகர் கழக துணைத் தலைவர் கே.வி. கண்ணன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.