FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பா.ஜ.க.வின் உழவன் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி: கூத்தாநல்லூரில் வரவேற்பு

பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் உழவன் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை வியாழக்கிழமை வந்தடைந்தது.

Updated On : 25 மே 2018, 1:02 am IST
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் உழவன் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை வியாழக்கிழமை வந்தடைந்தது.
பேரணிக்கு பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் டி. வரதராஜன், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா, கோட்ட இணைப் பொறுப்பாளர் சி.எஸ். கண்ணன், மாவட்டப் பொதுச் செயலாளர் டீ. துரையரசன் உள்ளிட்டோர் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர். குடவாசலிலிருந்து புறப்பட்ட பேரணி, கூத்தாநல்லூர் வட்டம், வாழாச்சேரி, பொதக்குடி, அத்திக்கடை, சேகரை வழியாக கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலத்தை அடைந்தது. கூத்தாநல்லூர் நகர பாஜக தலைவர் தியாகராஜன் தலைமையில், லெட்சுமாங்குடி பாலத்தில் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த சைக்கிள் பேரணியை நடத்துகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments