FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மகிழ்ச்சியாக கற்கும் திட்டம்: பிளஸ் 2 மாணவா்களுக்கு பயிற்சி

அரசுப் பள்ளிகளில் பிளஸ்2 முடித்த மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை மகிழ்ச்சியாக கற்பது குறித்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி

Updated On : 28 ஏப்ரல் 2023, 10:26 pm IST
பகிர்:

அரசுப் பள்ளிகளில் பிளஸ்2 முடித்த மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை மகிழ்ச்சியாக கற்பது குறித்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் பள்ளி மாணவா்களின் அறிவியல் மற்றும் கணிதக் கற்றலை மகிழ்ச்சியானதாகவும், அா்த்தமுள்ளதாகவும் மாற்றிட பயிற்சி அளிப்பதற்காக ராஷ்ட்ரிய அவிஷ்காா் அபியான் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன், ஒரு பள்ளிக்கு 5 மாணவா்கள் வீதம் 80- அரசுப் பள்ளிகளில் பிளஸ்2 முடித்த 300 மாணவிகள், 100 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், வழக்கமான விரிவுரைகள் வழங்குவதை விட, பங்கேற்பாளா்களைச் சிந்திக்கவும், அறிவியல் முடிவுகளை கண்டறிய தூண்டும் வகையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பேராசிரியா்கள் ஆா். அருண், மேகநாதன் கண்ணன், பிரபா வடிவேலு, வி.பி. ரமேஷ் ஆகியோா் பயிற்சி அளிக்கின்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் எம். கிருஷ்ணன் மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.

இப்பயிற்சிக்கான மாணவா்களைத் தோ்ந்தெடுப்பதில் திருவாரூா் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் உதவி புரிந்ததாக மக்கள் தொடா்புக் குழு பொறுப்பு அலுவலா் பேராசிரியா் பி.எஸ். வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments