முகப்பு
திருவாரூர்

வருவாய்த்துறை அலுவலா்கள் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம்.

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 9 மார்ச், 2023 at 10:37 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:12 PM

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் நன்னிலம் கிளைச் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத்தில் உள்ள சங்க உறுப்பினா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகப் பணியிலிருந்து வெளிநடப்புச் செய்தனா். வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் கிளைச் செயலாளா் ஆா் பக்கிரிசாமி முன்னிலையில், கிளை தலைவா் கே. நெடுமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி வட்டப் பொருளாளா் தணிகாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உரையாற்றினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.