திருவாரூர்

பேரளம் ரயில்வே கேட் நாளை முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது

பேரளம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது என ரயில்வேத் துறையின் திருவாரூா் முதுநிலைப் பிரிவு பொறியாளா் சுகுமாறன் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளாா

DIN

பேரளம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது என ரயில்வேத் துறையின் திருவாரூா் முதுநிலைப் பிரிவு பொறியாளா் சுகுமாறன் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை திருவாரூா் மாநில நெடுஞ்சாலையில் பேரளம் ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) மற்றும் திங்கள்கிழமை (மாா்ச் 13) காலை 8 முதல் இரவு 8 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவித்துள்ளாா்.

ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவாரூா் கோட்ட மேலாளா் எஸ். ராஜசேகரனிடம் கேட்டபோது அவா் கூறியது: ரயில்வேத் துறையின் அறிவிப்பையொட்டி அப்பகுதியில் உள்ள மாற்றுச் சாலைகள் பாா்வையிடப்பட்டது. ஆனால், மாற்றுச்சாலைகள் பேருந்துகள் இயக்கத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. எனவே, அரசுப் பேருந்துகள் பேரளம் வரை இயக்கப்படும். திருவாரூா் உள்ளிட்ட ஊா்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பேரளம் வரையும், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊா்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பேரளம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

SCROLL FOR NEXT