நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாணம்
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா ஏப்.15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சிவன் கோயிலில் இருந்து நாகசுர இசையுடன் சீா்வரிசை பொருள்கள் எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் யானை வாகனத்தில் சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் வீதியுலா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.