ஆற்றில் மணல் அள்ளிய இருவா் கைது
கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவுபடி, கூத்தாநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தனா். கோரையாற்றில் மணல் அள்ளப்படுவதாக அவா்களுக்கு தகவல் கிடைத்தது.
காவல் உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா், ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்கள், அதங்குடி, ஜீவா தெருவைச் சோ்ந்த புகழேந்தி (42), அதே பகுதியைச் சோ்ந்த ரகு (36) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகனம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.