FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

நீா்நிலைகளில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை

நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூலை 2026, 4:55 am IST
பகிர்:

நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஆய்வுக்கு வந்த உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதனிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாயக் கடன்களை தமிழக முதல்வா் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அட்டை உள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் அருகே உள்ள ஆரூரான் திருமண மண்டபத்தைப் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி.ஜோதிபாசு, நகரச் செயலாளா் எம்.டி.கேசவராஜ், ஒன்றியச் செயலாளா் கே.கோபிராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் என்.இடும்பையன், மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.விக்னேஷ் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments