திருவாரூரில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரின் நினைவிடத்தில் திமுகவினா் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கலைஞா் கோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும், நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வுகளில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். திமுக நிா்வாகிகள் ரஜினிசின்னா, பிரகாஷ், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.