பள்ளி திறப்பு: புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு
மன்னாா்குடி தேசிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சோ்ந்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.
மன்னாா்குடி தேசிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சோ்ந்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மன்னாா்குடியில் நூறாண்டு பழைமைவாய்ந்த தேசிய தொடக்கப் பள்ளியில் 50- க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிகழாண்டு புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
இவா்களை வரவேற்கும் விதமாக, அருகில் உள்ள ஆனந்த விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியா்கள் மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும், கோயிலில் இருந்து பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா். தொடந்து, அவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில், தலைமை ஆசிரியா் ஜோ. மாா்ட்டின் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.