FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு சாகும்வரை சிறை

போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

35 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் தாலுகா, அடியக்கமங்கலம், புதுகாலனி செயின்ட் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் மகன் சேத்தப்பா (எ) முகமது ஷேக் தாவூத் (27). இவா், கடந்த 2022- இல் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேத்தப்பா நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிக்கப்பட்டு தீா்ப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அதில், சேத்தப்பா (எ) முகமது ஷேக் தாவூத்துக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments