FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரொஹிங்கயாக்களை வெளியேற்ற வேண்டும்

சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர், ரொஹிங்கயாக்கள் ஆகியோரால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:45 am IST
பகிர்:

சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர், ரொஹிங்கயாக்கள் ஆகியோரால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தில்லியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரொஹிங்கயா மக்களும் அதிகளவில் தில்லியில் குடியேறியுள்ளனர். இவர்களால், தில்லியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. 
மேலும், இவர்கள் தில்லி மக்களுக்கு சேர வேண்டிய வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கின்றனர். இதனால், தில்லியில் மட்டும் பல லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தில்லியில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், ரொஹிங்கயா மக்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments