FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"சுகாதாரத்தைப் பேண வேண்டும்'

வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பிரேம் நகரில் சுகாதாரத்தை பேணுமாறு என்டிஎம்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா புதன்கிழமை உத்தரவிட்டார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பிரேம் நகரில் சுகாதாரத்தை பேணுமாறு என்டிஎம்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா புதன்கிழமை உத்தரவிட்டார்.
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பிரேம் நகரில் மேற்கொள்ளப்படுகின்ற சுகாதாரப் பணிகள் தொடர்பாக என்டிஎம்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா புதன்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக என்டிஎம்சி அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆய்வின் போது, பிரேம் நகரில் சுகாதாரத்தை பேணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுகாதார சீர்கேடு தொடர்பாக விளக்கம் கேட்டு பிரேம் நகர் துப்புரவு ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்' என்றனர். 
என்டிஎம்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா கூறுகையில், "பிரேம் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவது கவலைக்குரியது. என்னுடைய பதவிக் காலத்தில் சுகாதாரச் சீர்கேடுகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன். சுகாதாரச் சீர் கேட்டுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments