"பெண்களை சுயசார்பு உடையவர்களாக மாற்றும் வகையில் திட்டங்கள் அமல்'
வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் வகையில் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு
வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் வகையில் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தொகுதி உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் வகையில் விரிவான திட்டத்தை உருவாக்கி அதன்படி செயல்பட்டு வருகிறோம். மேலும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருகிறோம்.
இந்தத் திட்டங்கள் மூலம் பல்லாயிரக் கணக்கான பெண்கள் பயன்பெறுகின்றனர். பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றினால் நாட்டில் நிலவும் 50 சதவீதமான பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.