FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணையை வலியுறுத்தும் இசை ஓவியம்

கருணையை வலியுறுத்தும் வகையில், இசையின் சந்தத்துக்கு ஏற்ற வகையில் தில்லியில் ஓவியம் வரையப்பட்டது. 

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

கருணையை வலியுறுத்தும் வகையில், இசையின் சந்தத்துக்கு ஏற்ற வகையில் தில்லியில் ஓவியம் வரையப்பட்டது. 
புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பினாலே ஃபவுண்டேஷன் (ரஞதகஈ தஉஇஞதஈள் ஆஐஉசசஅகஉ ஊஞமசஈஅபஐஞச), ராமேசுவரத்தில் உள்ள ஆ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கருணையை வலியுறுத்தும் வகையில் ஓவியம் வரையும் நிகழ்வு புதுச்சேரியில் அண்மையில் தொடங்கப்பட்டது. 
இந்த ஓவிய நிகழ்ச்சிகள் இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. அந்தவகையில், கருணையை வலியுறுத்தும் வகையில், இசையின் சந்தத்துக்கு ஏற்ற வகையில் ஓவியம் வரையும் நிகழ்வு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், தில்லி கூடுதல் தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவின் மனைவியும் ஓவியருமான லிப்பி பரிதா கலந்து கொண்டு 20 சதுர அடி நீளமுள்ள ஓவியத்தை வரைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments