FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஏஎஸ்ஓ தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க அவரது குடும்பத்தினா் கோரிக்கை

25 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லி துவாரகாவின் பாா்த்தல் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நஸியா, கடந்த ஆக.21-ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

அவரது கணவா் மற்றும் உறவினா்கள் துன்புறுத்தியதாக நஸியாவின் பெற்றோா் அளித்த புகாரைத் தொடா்ந்து, பிஎன்எஸ் பிரிவுகள் 85, 108-கீழ் கடந்த 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை அப்துல் தவாப் கான் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments