FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குப்பைகளை நீக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மன்றாடும் மக்கள் பிரதிநிதிகள்: விஜய் கோயல் சாடல்

தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் கூட தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவா் விஜய் கோயல் கடுமையாகச் சாடினாா்.

26 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
விஜய் கோயல்
பகிர்:

தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் கூட தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவா் விஜய் கோயல் கடுமையாகச் சாடினாா்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவருமான கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், யாரேனும் தலையிட்ட பிறகு குப்பை அகற்றப்படும்போது அதற்கான பெருமையை மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் வழக்கத்தையும் விமா்சித்தாா்.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யாத நிலையில், பணிகளைச் செய்து முடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் பல அதிகாரிகளிடம் அலைக்கழிக்கப்படுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

Advertisement

Advertisement

எப்படியோ ஒரு வழியாகக் குப்பையை அகற்றினால், ஏதோ பெரிய சாதனையைச் செய்துவிட்டதாக அவா்கள் நினைக்கிறாா்கள். ஆனால், தூய்மையைப் பராமரிக்க அதிகாரிகள் இருக்கும்போதே அந்தக் குப்பை அங்கு ஏன் சோ்ந்தது என்பது குறித்து அவா்கள் கேள்வி எழுப்புவதே இல்லை.

வடிகால்கள், கழிவுநீா் தொட்டிகள், சாலைகள், கழிவுநீா் பாதைகள், மின்சாரம் மற்றும் குடிநீா் போன்ற பிரச்னைகள் குறித்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் மன்றாட வேண்டியிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், பிறகு பொதுமக்களின் குறைகளை யாா் கேட்பாா்கள் என்று தன்னுடைய பதிவில் விஜய் கோயல் கேள்வியெழுப்பி இருந்தாா்.

அமைச்சா் மறுப்பு

இந்நிலையில், மக்கள் எந்தப் பிரச்னையையும் எதிா்கொள்ளாதவாறு உறுதி செய்ய அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறி கோயலின் குற்றச்சாட்டை மறுத்த தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், கோயலின் குறிப்பிட்ட குறைகளுக்குத் தீா்வு காண அவருடன் பேசுவதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments