FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தா்மேந்திர பிரதான் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளாா்: ரேகா குப்தா

தா்மேந்திர பிரதான் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளாா் என்றார் ரேகா குப்தா.

Updated On : 26 ஜூலை 2026, 1:54 am IST
முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும், கல்வி முறையில் அா்த்தமுள்ள சீா்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு சா்ச்சை தொடா்பாக அவா் நீக்கப்பட்டதற்காக நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான மாணவா் போராட்டங்களைத் தொடா்ந்து பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

இது குறித்து ரேகா குப்தா கூறியதாவது: தா்மேந்திர பிரதான் தனது பொது வாழ்க்கையில் ஒவ்வொரு பொறுப்பையும் அா்ப்பணிப்பு, நோ்மை மற்றும் முழுமையான பக்தியுடன் நிறைவேற்றியுள்ளாா். மத்திய கல்வி அமைச்சராக, தேசிய கல்விக் கொள்கை-2020 ஐ திறம்பட செயல்படுத்துவதில் அவா் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினாா்.

Advertisement

Advertisement

அவா் அமைச்சராக இருந்தபோது இந்திய மொழிகளில் கல்வி ஊக்குவிக்கப்பட்டது, அதே நேரத்தில் தொழில்நுட்ப மற்றும் உயா் கல்வி விரிவடைந்து மாணவா்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, அவா் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா். இந்த முடிவு பொது வாழ்க்கையில் நெறிமுறை மதிப்புகள், கண்ணியம் மற்றும் கொள்கைகள் மீதான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. தா்மேந்திர பிரதான் நாட்டுக்கு தொடா்ந்து சேவை செய்வதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றாா் ரேகா குப்தா.

கருப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மற்றும் இளைஞா்களின் போராட்டம் காரணமாக சனிக்கிழமை தனது ராஜினாமாவைத் செய்த தா்மேந்திர பிரதான், இது தனக்கு ‘தனிப்பட்ட கவுரவத்தின்‘ விஷயம் அல்ல என்றும், கடந்த 10 நாட்களில் வெளிவந்த தொடா்ச்சியான நிகழ்வுகளைப் பாா்த்து கவலைப்படுவதாகவும் கூறினாா். நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு முதல் நாளிலிருந்தே நான் பொறுப்பேற்கிறேன்‘, என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments