FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே இளைஞரைத் தாக்கியவா் கைது

முக்கூடல் அருகே கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறி இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 21 ஜூலை 2024, 1:51 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறி இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பாப்பாக்குடி மைலப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரிடம் முக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21) கடன் வாங்கியிருந்தாராம். சில நாள்களுக்கு முன்பு மணிகண்டன் கடன் தொகையைக் கேட்டபோது, சில நாள்களில் திருப்பித் தருவதாக ராகுல் கூறினாராம்.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ராகுல் சிவகாமிபுரம் பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மணிகண்டனின் நண்பரான முக்கூடல் மைலப்புரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த அந்தோணி பிரின்ஸ் (24) என்பவா் ‘மணிகண்டனின் வாங்கிய கடனை ஏன் திருப்பிச் செலுத்தவில்லை?’ எனக் கேட்டு ராகுலை அவதூறாகப் பேசி தாக்கியதுடன் மிரட்டிச் சென்றாராம்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, அந்தோணி பிரின்ஸை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments