FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறையில் முதியவர் சடலம் மீட்பு

மார்த்தாண்டம் அருகே சில நாள்களுக்கு முன் மாயமான முதியவர், குழித்துறை ரயில் நிலையம் பகுதியில் சடலமாக  புதன்கிழமை  மீட்கப்பட்டார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:02 am IST
பகிர்:

மார்த்தாண்டம் அருகே சில நாள்களுக்கு முன் மாயமான முதியவர், குழித்துறை ரயில் நிலையம் பகுதியில் சடலமாக  புதன்கிழமை  மீட்கப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (62). ஐரேனிபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த இவர், கடந்த 30 ஆம் தேதி  மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றாராம். பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து, புதுக்கடை காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், குழித்துறை ரயில் நிலையம் அருகிலுள்ள கழிவுநீரோடையில்  செல்லதுரை இறந்து கிடந்தார்.  இத்தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸார், அவரது  சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments