FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ். விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ். விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து மறுகால் ஷட்டர்கள்  திறக்கப்பட்டதால் தாமிரவருணி  ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் விளையாட்டு ரயில், சறுக்கு விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை தாமிரவருணி ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 
அங்கிருந்த தொழிலாளர்கள் எனது தொகுதி பேரவை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னித்தோட்டம், கல்பாலத்தடி, திக்குறிச்சி உள்ளிட்ட பகுதி வீடுகளிலும், செங்கல் சூளையிலும் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் குழித்துறைக்கு மீட்பு குழுவை அனுப்ப வேண்டும். மேலும் பாதிப்புகள் , சேதங்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளங்களின் கரையோரம் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாவுபலி பொருள்காட்சி அரங்க தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் மழைவெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கு  உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments