குலசேகரத்திலிருந்து கேரளத்துக்கு ரூ. 1.50 லட்சம் நிவாரணப் பொருள்கள்
கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஏ.ஜே.எம். ராஜா தலைமையில், மெர்சி, வால்டர், கிங்ஸ்லி, சதீஷ், இன்பராஜ், வில்சன், பாபு பிரின்ஸ், ஷிபு, நெல்சன், குமார், கிறிஸ்துதாஸ், அருள்ராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜன், ராபின்சன், குருசப்பன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சேகரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் நேரடியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.