சுதந்திரப் போராட்ட தியாகி நூற்றாண்டு விழா
சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.செல்லையா நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.செல்லையா நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். குருந்தன்கோடு வட்டாரத் தலைவர் ஜீவன் ஜெ.ஜெரால்டு கென்னடி, காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர்கள் சுந்தர்ராஜ் (குமரி கிழக்கு), ஜெஸ்டின் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தியாகியின் படத்தை திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், தியாகி செல்லையாவின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர்கள் அசோகராஜன், வைகுண்டதாஸ், செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் தியாகிதவசிமுத்து, முருகானந்தம், ராஜதுரை, சுயம்பு, தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.