FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அனந்தனார் கால்வாயில் கல்லூரி மாணவர்கள் தூர்வாரும் பணி

உதயா பொறியியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், சிறப்பு முகாம் கல்லூரித் தலைவர் சி.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

உதயா பொறியியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், சிறப்பு முகாம் கல்லூரித் தலைவர் சி.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் வெள்ளிச்சந்தை கிராமத்திலுள்ள அனந்தனார் கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஐயப்பன் என்ற ஏழை விவசாயி குடும்பத்துக்கு இலவசமாக கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது. வெள்ளிச்சந்தை ஊர் நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் எஸ்.கவிதா, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஆர்.கே.நிவேந்திரன், உதவிப் பேராசிரியர்கள் சிவராஜ், இனிகோபெஸி, முத்துகிருஷ்ணன், சகாயலியோனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments