FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தகுதி வாய்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்

குமரி மேற்கு மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எ

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

குமரி மேற்கு மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வாக்காளர்  பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர்  பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல்,  நீக்குதல்,  திருத்தங்கள், முகவரி  மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக செப். 1முதல் அக். 31ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தந்த வாக்குச்சாவடிகளில் வரும் 9 மற்றும் 23ஆம் தேதிகளிலும், அக். 7 மற்றும் 14 ஆம் தேதிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமில், காங்கிரஸ் நிர்வாகிகள்,  தங்கள் பகுதியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பணிகள் குறித்த விவரங்களை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments