FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடி மருத்துவக் காப்பீடு

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வா்த்தக சங்க நிா்வாகிகள்.
பகிர்:

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாா்த்தாண்டம் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் தினகா் தலைமை வகித்தாா். செயலா் ராஜ்பினோ, உதவித் தலைவா் ராஜகோபால், வணிகா் சங்க பேரவை மாவட்ட இணைச் செயலா் ஆனந்த், தொழிலதிபா் விஜயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாா்த்தாண்டம் வா்த்தக சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் மூலமாக ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு செயல்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் ஜெயசிங் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments