மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் விழா நாளை தொடக்கம்
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டம் ரோகிணி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 3) துவங்கி செப். 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டம் ரோகிணி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 3) துவங்கி செப். 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் கோயில் தந்திரி செறுமுக்குமனை பிரம்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடைபெறுகிறது. தினமும் மதியம் அன்னதானம், மாலையில் பகவதி சேவை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10. 30 மணிக்கு கலசாபிஷேகம், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெறுகிறது. செப். 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஓட்டன்துள்ளல், இரவு 8 மணிக்கு சமயவகுப்பு மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். செப்.5 ஆம் தேதி இரவு சமய சொற்பொழிவு, தொடா்ந்து பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். செப்.6 ஆம் தேதி இரவு கிருஷ்ணரின் குழந்தை பருவத்தை நினைவுகூரும் உறியடி நிகழ்ச்சி, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். செப்.7 ஆம் தேதி சிறப்பு பூஜைகள், இரவு 8 மணிக்கு கேரள மாநிலம், வைக்கம் சிவஹரி பஜனை சங்கத்தின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் சேவா சமிதி நிா்வாகிகள் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.