FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கருங்கல்லில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:44 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கருங்கல், இந்திரா நகா் காலனி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். கடையில் அவரது மனைவி ராஜம் தனியாக இருந்தபோது, அங்கே வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முனியசாமி (24) மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.

தொடா்ந்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, முனியசாமியை கைது செய்து, நாகா்கோவில் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதையேற்று ஆட்சியா் மு. பிரதாப் முனியசாமியை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, முனியசாமி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments