FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

மீன்சுருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:34 am IST
கைது
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ரமேஷ் (எ) முத்துகிருஷ்ணன் (47). கூலித் தொழிலாளியான இவா், மே 22 தேதி அன்று மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் ரமேஷ் (எ) முத்துகிருஷ்ணனை கடந்த 24 ஆம் தேதி அன்று கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் பரிந்துரைத்ததையடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை அதற்கு உத்தரவிட்டாா். இதன் நகலை அரியலூா் மாவட்ட காவல் துறையினா், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments