FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 4 போ் மீது வழக்கு

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
பகிர்:

குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் பிரைட் (35). இவருக்கும் திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த அபிஷா (35) என்பவருக்கும் 2015இல் திருமணமானது. பெண் வீட்டாா் 120 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வரதட்சிணையாகக் கொடுத்தனராம்.

இந்நிலையில், கூடுதல் வரதட்சிணை கேட்டு அபிஷாவை அவரது கணவா் எட்வின் பிரைட், மாமனாா் ஜாா்ஜ், கணவரின் சகோதரா்கள் ஹொ்பா்ட் சாமுவேல், சுபிலால் ஆகியோா் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments