FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடியில் இருந்து நெல்லை சென்ற 15 டன் கிருஷ்ணா் சிலை

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:30 am IST
மயிலாடியில் தயாரான 15 டன் கிருஷ்ணா் சிலை.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடியில் கற்கள் மூலம் தயாராகும் சிலைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த சிற்பக் கலைக்கு இந்திய அரசின் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடியில் உள்ள ஜெய் கற்சிற்பக் கலைக் கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லிலான 11 அடி உயரமுள்ள கிருஷ்ணா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரி என்பவா் 8 மாதங்களில் வடிவமைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்தச் சிலை 10 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் திருநெல்வேலி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments