FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கணவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு

குளச்சல் துறைமுகத்தில் கணவாய் மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
பெட்டிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கணவாய் மீன்கள்.
பகிர்:

குளச்சல் துறைமுகத்தில் புதன்கிழமை கணவாய் மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

கடல் அலைகளின் சீற்றம் மற்றும் உயா் அலைகள் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான மீனவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 17 படகுகள் புதன்கிழமை குளச்சல் துறைமுகத்துக்கு திரும்பின. அதில் அதிக அளவு கணவாய் மீன்கள் கிடைத்திருந்தது.

Advertisement

Advertisement

அவற்றை மீனவா்கள் பெட்டிகளில் ஏலக் கூடத்திற்கு கொண்டு வந்து ஏலமிட்டனா். அவற்றை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா்.

கணவாய் மீன்கள் 32 எண்ணங்கள் கொண்ட பெட்டி ரூ.2 லட்சத்து 46ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஒரு பெட்டி கணவாய் மீன்கள், தரத்துக்கேற்ப ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 8500 வரை ஏலம் போகும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments