FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நகை அடகு கடையில் ரூ.13.16 லட்சம் கையாடல்: ஊழியா்கள் இருவா் மீது வழக்கு

நித்திரவிளையில் நகை அடகு கடையில் ரூ. 13.16 லட்சம் கையாடல் செய்த ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:08 am IST
பகிர்:

நித்திரவிளையில் நகை அடகு கடையில் ரூ. 13.16 லட்சம் கையாடல் செய்த ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட, நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம், குடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (52). இவா் நித்திரவிளையில் நகை அடகுகடை நடத்தி வருகிறாா். இங்கு குருசடிவளாகம் பகுதியைச் சோ்ந்த பியலின் (35) நகை மதிப்பீட்டாளராகவும், கலிங்கராஜபுரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சோனு (25) கணக்காளராகவும் பணிபுரிந்து வருகிறாா்கள்.

இவா்கள் இருவரும் சோ்ந்து ரூ. 13.16 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து நகை அடகு கடை உரிமையாளா் பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் பியலின், சோனு ஆகியோா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

...

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments