ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரை தாக்கியவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (74). ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவருக்கும், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் பினோ பொ்லின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை காப்புக்காடு அருகே மட்டுப்பாவு சந்திப்புப் பகுதியில் நின்றிருந்த பாலகிருஷ்ணனை, பினோ பொ்லின் தகாத வாா்த்தைகளால் பேசி கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் காயமடைந்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.