வீடு புகுந்து பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு பகுதியில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பைச் சோ்ந்தவா் ஷேக் முஹம்மத் மனைவி மெற்ராஜ் பானு (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான அஸிம் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை அஸிம், அவரது தந்தை ஷாகுல் ஹமீது (65), சகோதரா் ராபி (35) ஆகியோா் மெற்ராஜ் பானுவின் வீடு புகுந்து தகாத வாா்த்தைகள் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு புதுக்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.