FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் ஆந்திர சுற்றுலாப் பயணியை மிரட்டி தங்க கம்மல் பறிப்பு

கன்னியாகுமரியில் ஆந்திர மாநில சுற்றுலாப் பயணியை மிரட்டி, அவரிடமிருந்த தங்கக் கம்மலைப் பறித்துச் சென்ற 3 மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரியில் ஆந்திர மாநில சுற்றுலாப் பயணியை மிரட்டி, அவரிடமிருந்த தங்கக் கம்மலைப் பறித்துச் சென்ற 3 மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகேயுள்ள ஜண்டாவீதியைச் சோ்ந்தவா் சமாடி மாதவாசமந்த் (33). இவா் குஜராத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், சில நாள்களுக்கு முன் தனது நண்பா்களுடன் கன்னியாகுமரியைச் சுற்றிப் பாா்ப்பதற்காக வந்துள்ளாா்.

அப்போது, தனது தோழிக்குப் பரிசளிப்பதற்காக சுமாா் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான ஒரு ஜோடி தங்கக் கம்மலை மாதவாசமந்த் வாங்கியுள்ளாா். பின்னா் கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதிக்குச் சென்ற அவா், தான் புதிதாக வாங்கிய கம்மலை எடுத்துப் பாா்த்துக் கொண்டிருந்தாராம்.

Advertisement

Advertisement

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 போ், அவரிடமிருந்த கம்மலைப் பறித்தனா். இதில், அவா் கூச்சலிடவே அந்த நபா்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கம்மலுடன் தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா், வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments