தஞ்சைப் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் காயம்!
தஞ்சைப் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் நால்வர் காயமடைந்தது பற்றி..
தஞ்சைப் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் நால்வர் காயமடைந்துள்ளனர்.
உலகப் புகழ்வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பெரிய கோயில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கலைந்து அங்கு இருந்த பொதுமக்கள் - சுற்றுலாப் பயணிகளை விரட்டி விரட்டி கடித்தது.
இதில் அனைவரும் தலைதெறிக்க ஓடினர். இதில் மூன்று பெண்கள் உள்பட நான்கு ஆந்திர பக்தர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.