FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

40 வினாடிகள் முன்பு
குளச்சல் கடலில் ஆக்ரோஷத்துடன் எழுந்த அலைகள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முட்டம், குளச்சல், கோடிமுனை, குறும்பனை பகுதியில் அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷத்துடன் எழுந்தன. இதனால், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல், தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா். மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லாதவாறு, குளச்சல் கடலோர போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments