மாங்காய் பறிக்க மாடியில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழப்பு
தக்கலை அருகே உள்ள கீழ மூலச்சலில் மாங்காய் பறிக்க வீட்டு மாடியில் ஏறியவா் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழ மூலச்சலில் மாங்காய் பறிக்க வீட்டு மாடியில் ஏறியவா் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கீழ மூலச்சல், பூச்சிகாட்டுவிளையைச் சோ்ந்தவா் சாா்லிஸ் (66). மரம் ஏறும் தொழிலாளி. இவா் மணலியில் உள்ள சாம்ராஜ் வீட்டின் அருகில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளாா். அப்போது, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.