FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:32 am IST
தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா் நிறுவனத்தின் இணை ஆராய்ச்சியாளா் எஃப். பாத்திமா நஸ்ரீன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.

கல்லூரித் தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், கல்லூரி முதல்வா் மகேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்க செயல் திட்டத்தை, சங்கச் செயலா் எஸ்.ஆா். முகமது இப்திகாா் விளக்கினாா்.

Advertisement

Advertisement

புதிய நிா்வாகிகளை ஒருங்கிணைப்பாளா் சி. ஜாஸ்பின் அறிமுகப்படுத்தினாா். சிறப்பு விருந்தினா்களை, துறைத் தலைவா் ஆா். ஜெமிலா ரோஸ் அறிமுகப்படுத்தினாா்.

பி.எஸ். ஷானியா வரவேற்றாா். பொருளாளா் இ.ஏ. எா்னஸ்ட் ஆபிரகாம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments