கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்
கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
பளுகல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் குமாரதாஸ் தலைமையிலான போலீஸாா் பளுகல் அருகே தேரிபுறம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.
மூவோட்டுக்கோணம் - மத்தம்பாலை சாலையில் கேரளம் நோக்கி வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ராதாபுரத்திலிருந்து மலையடி பகுதிக்கு ஜல்லிகள் கொண்டுசெல்ல அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, கேரளத்துக்கு கடத்திச்செல்லப்பட இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான திருவட்டாறு அருகே தேமானூா், புரவன்விளையைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் அஜித் (35) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.