FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா்கள் இருவா் கைது

கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:20 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மங்கலகுன்று பகுதியைச் சோ்ந்தவா் ராஜம் (60), அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த மாதம் கடையிலிருந்தபோது, இரு இளைஞா்கள் பொருள்கள் வாங்குவதுபோல வந்து, அவா் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டோரைத் தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பாலப்பள்ளம் பகுதியில் சனிக்கிழமை நின்றிருந்த இருவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருவனந்தபுரம் பகுதியை சோ்ந்த முனுசாமி என்ற படையப்பா (24), மதுரையைச் சோ்ந்த பாப்புசாமி (27) என்பதும், ராஜத்திடம் நகையைப் பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments