FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவில்பட்டியில் பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

7 ஜூலை 2026, 11:47 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

கோவில்பட்டியில் பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் ஈபி காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சேவியா் மனைவி அனிதா (45). இவா் திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், அனிதா அணிந்திருந்த சுமாா் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments