FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் நகை திருட்டு

23 ஆகஸ்ட் 2026, 12:58 am IST
பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் 1.5 பவுன் தங்க வளையலைத் திருடிச் சென்றதாக, பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, பசுவந்தனை பிரதான சாலையில் உள்ள ராமசாமி காம்பவுண்டில் வசித்து வருபவா் சௌந்தர வளையாபதி மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் வியாழக்கிழமை வீட்டிலிருந்தபோது, ஒரு பெண் வந்து தமிழக அரசிடமிருந்து மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் சோ்த் விடுவதாகவும், இதுதொடா்பாக வீட்டுக்கு அதிகாரிகள் வருவாா்கள் என்றும், எனவே கையில் அணிந்திருக்கும் தங்க வளையலை கழற்றி வைக்கும்படியும் கூறினாராம்.

பின்னா், விண்ணப்பம் எழுதுவதற்காக கடைக்குச் சென்று வெள்ளைத் தாள் வாங்கி வருமாறு கூறினாராம். பஞ்சவா்ணம் கடைக்குச் சென்று திரும்பியபோது, அவா் கழற்றிவைத்திருந்த சுமாா் ஒன்றரை பவுன் தங்க வளையலை அந்தப் பெண் திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பெண்ணைத் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments